🔗

நஸாயி: 544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الْغَدَاةِ، فَلَمَّا أَصْبَحْنَا مِنَ الْغَدِ أَمَرَ حِينَ انْشَقَّ الْفَجْرُ أَنْ تُقَامَ الصَّلَاةُ فَصَلَّى بِنَا، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَسْفَرَ، ثُمَّ أَمَرَ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَصَلَّى بِنَا، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ»


544. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஃபஜ்ர் தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். மறுநாள் காலையில் நாங்கள் எழுந்தபோது, ஃபஜ்ர் நேரம் வந்ததும், இகாமத் கூற நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். (நாங்கள் தொழுதோம்.)

பின்னர் அடுத்த நாள் காலையில், வெளிச்சம் நன்றாகப் பரவிய பின்பு இகாமத் கூற நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “தொழுகை நேரத்தைக் கேட்டவர் எங்கே? என்று கேட்டுவிட்டு, “இந்த இரண்டு நேரங்களுக்கு இடைப்பட்டதே (ஃபஜ்ர் தொழுகையின்) நேரம்” என்று கூறினார்கள்.