🔗

நஸாயி: 552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ بَيْنَ صَلَاتَيْكُمْ هَاتَيْنِ، وَيُصَلِّي الْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَيُصَلِّي الْعِشَاء إِذَا غَابَ الشَّفَقُ – ثُمَّ قَالَ عَلَى إِثْرِهِ: – وَيُصَلِّي الصُّبْحَ إِلَى أَنْ يَنْفَسِحَ الْبَصَرُ


பாடம்:

ஸுபுஹ் தொழுகையின் கடைசி நேரம்.

552. நபி (ஸல்) அவர்கள் சூரியன் (நடு உச்சியிலிருந்து) சாய்ந்த போது மக்களுக்கு லுஹர் தொழுகை நடத்துவார்கள். அஸர் தொழுகையை உங்களின் இரண்டு தொழுகைகளுக்கு நடுவில் நடத்துவார்கள். சூரியன் மறைந்துவிட்டால் மஃக்ரிப் தொழுகை நடத்துவார்கள். செம்மேகம் மறைந்ததும் இஷா தொழுகை நடத்துவார்கள். பார்வை தூரமாக தெரியும் அளவிற்கு விடியும் வரை ஸுபுஹ் தொழுகை நடத்துவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)