🔗

நஸாயி: 5531

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»


பாடம்:

உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்தும், இடிபாடுகளுக்குள் சிக்கியும் மரணிப்பதை விட்டு பாதுகாவல் தேடுதல்.

5531. அபுல்யஸர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) பிரார்த்திப்பார்கள்:

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினத் தரத்தீ, வல்ஹத்மி, வல்ஃகரகி, வல்ஹரீக். வ அஊது பிக அய் யதகப்பத்தனிஷ் ஷைத்தானு இன்தல் மவ்த். வ அஊது பிக அன் அமூத ஃபீ ஸபீலிக முத்பிரா. வ அஊது பிக அன் அமூத லதீஃகா”

(பொருள்: அல்லாஹ்வே! உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும், இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும், நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும், நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும், (நச்சு உயிரினங்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)