أَنَّ رَجُلًا قَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا أَرَاكَ تَسْتَلِمُ إِلَّا هَذَيْنِ الرُّكْنَيْنِ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ مَسْحَهُمَا: يَحُطَّانِ الْخَطِيئَةَ ” وَسَمِعْتُهُ يَقُولُ: «مَنْ طَافَ سَبْعًا، فَهُوَ كَعِدْلِ رَقَبَةٍ»
5701. அப்துல்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், அபூஅப்துர்ரஹ்மான் அவர்களே! நீங்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர மற்றதை தொட்டதை நான் பார்த்ததில்லையே ஏன்? எனக் கேட்டார். அதற்கவர்கள், அவ்விரண்டையும் தொடுவது பாவங்களை அழித்துவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று பதிலளித்தார்கள்.
மேலும், கஅபாவை ஏழு முறை சுற்றிவருபவர் ஒரு அடிமையை உரிமைவிட்டவர் போன்றவராவார் என்று கூறியதையும் நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.