«أَنَّهُ صَلَّى بِالْبَصْرَةِ الْأُولَى، وَالْعَصْرَ لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ، وَالْمَغْرِبَ وَالْعِشَاء لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ فَعَلَ ذَلِكَ مِنْ شُغْلٍ». وَزَعَمَ ابْنُ عَبَّاسٍ «أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْأُولَى، وَالْعَصْرَ ثَمَانِ سَجَدَاتٍ لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ»
590. ஜஅஃபர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், பஸராவில் (இருக்கும் போது) ஒரு வேலையின் காரணமாக முதல் தொழுகை லுஹரையும், அஸர் தொழுகையையும் (இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதார்கள். அவ்வாறே மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை (இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதார்கள்.
மேலும் அவர்கள், தான் மதீனாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முதல் தொழுகையான லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் (இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் எட்டு ரக்அத்களாக தொழுததாகவும் கூறினார்கள்.