كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ»
பாடம்:
பனிக்கட்டியால் உளூச் செய்தல்.
61. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹும் மஃக்சில் கத்தாயாய பிமாஇஸ்ஸல்ஜி வவல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை கழுவுவாயாக! வெண்மையான ஆடையை, அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவது போன்று என்னுடைய உள்ளத்தை தவறுகளிலிருந்து நீ தூய்மைப்படுத்துவாயாக!)