«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»
பாடம்:
இகாமத் சொல்லப்பட்டபின் வேறு தொழுகைகளை தொழுவது வெறுப்பிற்குரிய செயல்.
865. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)