سَأَلْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّهَارِ قَبْلَ الْمَكْتُوبَةِ قَالَ: مَنْ يُطِيقُ ذَلِكَ؟ ثُمَّ أَخْبَرَنَا قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حِينَ تَزِيغُ الشَّمْسُ رَكْعَتَيْنِ، وَقَبْلَ نِصْفِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ يَجْعَلُ التَّسْلِيمَ فِي آخِرِهِ»
875. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் பர்ளுத் தொழுகைக்கு முன் தொழுத தொழுகைகளைப் பற்றி (விளக்கமாக) நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “யாரால் அதனை முழுமையாகச் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.
பின்னர் பின்வருமாறு கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் நடுவானிலிருந்து சாயும்போது இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். மேலும், பகலின் நடுப்பகுதிக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் இறுதியில் ஸலாம் கூறுவார்கள்.