«إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا»
922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இமாம் பின்பற்றப்படுவதற்காகவே (முன்னிறுத்தப்பட்டுள்ளார்). எனவே, அவர் தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் (குர்ஆனை) ஓதினால், நீங்கள் மௌனமாக செவிமடுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூஅப்துர் ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஸஃத் அல்அன்சாரீ பலமானவர் என்று முஃகர்ரமி (ரஹ்) அவர்கள் (அடிக்கடி) கூறுவார்.