🔗

நஸாயி: 961

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ أَبَا هُرَيْرَةَ، «قَرَأَ بِهِمْ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا»، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا»


பாடம்:

இதஸ்மாஉன் ஷக்கத் எனும் (84ஆவது) அத்தியாயத்தின் வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்தல்.

961. அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) எங்களுக்கு “இதஸ்ஸமாஉன் ஷக்கத்” எனும் (84ஆவது) அத்தியாயத்தை ஓதி அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சஜ்தாச் செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்துத் திரும்பிய பின் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியபோது சஜ்தாச் செய்தார்கள்” எனத் தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)