ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ: ” مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ تَكُنْ لَهُ نُورًا وَلَا بُرْهَانًا وَلَا نَجَاةً، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ فِرْعَوْنَ، وَقَارُونَ، وَهَامَانَ، وَأُبَيٍّ صَاحِبِ الْعِظَامِ
பாடம்:
யார் தொழுகையை பேணவில்லையோ அவர் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைய்யு பின் கலஃப்… ஆகியாருடன் இருப்பார் என்ற ஹதீஸில் ஏற்படும் விமர்சனத்திற்கு விளக்கம்.
3180. நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும். மேலும் யார் அதை பேணவில்லையோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் வெற்றியாகவும் ஆதாரமாகவும் இருக்காது.
மேலும் அவர் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைய்யு பின் கலஃப்… ஆகியாருடன் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)