مَنْ قَرَأَ سُورَةَ الْبَقَرَةِ تُوِّجَ بِتَاجِ الْجَنَّةِ
وَبِإِسْنَادِهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فِي بُيُوتِكُمْ وَلَا تَجْعَلُوهَا قُبُورًا
وَبِإِسْنَادِهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ لَمْ يَكُنْ بَيْنَهُ وَبَيْنَ أَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا أَنْ يَمُوتَ، فَإِذَا مَاتَ دَخَلَ الْجَنَّةَ
2167. ஸல்ஸால் பின் தலஹ்மஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஸூரத்துல் பகராவை ஓதக்கூடியவருக்கு (மறுமையில்) சொர்க்கத்தின் கிரீடம் அணிவிக்கப்படும்.
உங்கள் வீடுகளில் (திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓதுங்கள்; அவைகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் (2: 255 வது வசனமான) ஆயத்துல் குர்ஸியை ஓதிவரக்கூடியவருக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் சொர்க்கம் செல்ல தடையாக இருக்காது. அவர் மரணித்துவிட்டால் சொர்க்கம் செல்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.