سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَعْوَادِ الْمِنْبَرِ يَقُولُ: ” مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِهِ الْجَنَّةَ إِلَّا الْمَوْتُ، وَمَنْ قَرَأَهَا حِينَ يَأْخُذُ مَضْجَعَهُ أَمَّنَهُ اللهُ عَلَى دَارِهِ وَدَارِ جَارِهِ وَالدُوَيْرَاتِ حَوْلَهُ
2174. ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.
யார் உறங்கச் செல்லும்போது அதை ஓதுவாரோ அவரின் வீட்டிற்கும், அவரின் அண்டை வீட்டாருக்கும் அவரின் வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து வீட்டினருக்கும் அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரைமேடையில் நின்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)