كُنْتُ مَعَ ابْنِ شِهَابٍ فِي سَفَرٍ فَصَامَ يَوْمَ عَاشُورَاءَ، فَقِيلَ لَهُ: تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فِي السَّفَرِ وَأَنْتَ تُفْطِرُ فِي رَمَضَانَ؟ قَالَ: ” إِنَّ رَمَضَانَ لَهُ عِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ، وَإِنَّ عَاشُورَاءَ تَفُوتُ
3518. அபூஜபலா அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுடன் பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள் ஆஷூரா நோன்பை வைத்தார்கள். அவர்களிடம், “நீங்கள் பயணத்தில் ரமழான் நோன்பை விட்டுவிடுகிறீர்கள். ஆனால் ஆஷூரா நோன்பை வைத்துவிடுகிறீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ரமழான் நோன்பை வேறு நாட்களில் வைத்துவிடலாம். ஆனால் ஆஷூரா நோன்பு தவறிவிடும் என்று கூறினார்கள்.