🔗

shuabul-iman-3692: 3692

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً يَبْلُغُ بِهِ إِلَى بَيْتِ اللهِ فَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا، وَذَلِكَ أَنَّ اللهَ قَالَ: {وَلِلَّهِ عَلَى النَّاسِ حَجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا} [آل عمران: 97]


3692.

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான) வாகன வசதி ஆகியவற்றை பெற்றிருந்தும் அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ மரணித்துவிடுவது பரவாயில்லை.

ஏனெனில் அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன்: 3:97)

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)