سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: ” أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا “
وَكَذَلِكَ رَوَاهُ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، عَنْ عَمَّارِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، وَعَمَّارُ بْنُ مُحَمَّدٍ فِيهِ نَظَرٌ، وَهَذَا الْحَدِيثُ شَاهِدٌ مُرْسَلٌ
7273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “உனது முஸ்லிம் சகோதரனை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது, அல்லது அவரது கடனைத் தீர்ப்பது, அல்லது அவருக்கு ரொட்டி (உணவு) அளிப்பது ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இதே போன்று வலீத் பின் ஷுஜாஃ அவர்களும் அம்மார் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் அம்ர் … என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.
இதில் இடம்பெறும் அம்மார் பின் முஹம்மத் என்பவரைப் பற்றி விமர்சனம் உள்ளது. மேலும் இந்த ஹதீஸுக்கு (இதை அடுத்து வரும்) முர்ஸலான செய்தி (ஹதீஸ் எண்-7274) ஷாஹிதாக உள்ளது.