يَا أَنَسُ، إِذَا خَرَجْتَ مِنْ بَيْتِكَ فَسَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ، وَأَسْبِغِ الْوُضُوءَ يَصْلُحْ لَكَ دِينُكَ
8390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது மக்களை சந்தித்தால் ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும். நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது மார்க்கம் சீராகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)