🔗

திர்மிதி: 102

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ المَسْحِ عَلَى الخُفَّيْنِ؟ فَقَالَ: «السُّنَّةُ يَا ابْنَ أَخِي»، وَسَأَلْتُهُ عَنِ المَسْحِ عَلَى العِمَامَةِ؟ فَقَالَ: «أَمِسَّ الشَّعَرَ المَاءَ»


102. அபூஉபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! அது நபிவழி” என்று பதிலளித்தார்கள். மேலும் நான் தலைப்பாகை மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “முடிக்குத் தண்ணீர் படச் செய்” என்று பதிலளித்தார்கள்.