«لَا تَجْلِسُوا عَلَى القُبُورِ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا»
பாடம்:
அடக்கத்தலங்கள் (கப்று) மீது நடப்பதும், அமர்வதும், அவற்றை நோக்கித்தொழுவதும் வெறுக்கப்பட்டவை என்பது பற்றி வந்துள்ளவை.
1050. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.
அறிவிப்பவர்: அபூமர்ஸத் (ரலி)