«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ زَوَّارَاتِ القُبُورِ
பாடம்:
பெண்கள் (அதிகமாக) மண்ணறைகளை சந்திக்கச் செல்வது வெறுப்புக்குரிய செயல் என்பது குறித்து வந்துள்ளவை.
1056. அதிகமாக மண்ணறைகளை சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் இப்னு அப்பாஸ் (ரலி), ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
மண்ணறைகளை சந்திப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியதற்கு முன் இந்தத் தடை இருந்ததாக அறிஞர்களில் சிலர் கருதுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியப் பின்பு ஆண்கள், பெண்கள் அனைவரும் இந்த அனுமதியில் சேர்ந்தவர்களாகிவிட்டனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அறிஞர்களில் சிலர், “பெண்கள் பொறுமை குறைந்தவர்களாகவும், அதிகம் பயம், திடுக்கம் உள்ளவர்களாகவும் இருப்பதனால் தான் அவர்கள் மண்ணறைகளைச் சந்திப்பது வெறுப்புக்குரியது என்று கூறப்பட்டது” என கூறுகின்றனர்.