أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: ” يَا عَلِيُّ، ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا: الصَّلَاةُ إِذَا أَتَتْ، وَالجَنَازَةُ إِذَا حَضَرَتْ، وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا
பாடம்:
ஜனாஸாவை விரைவாக அடக்கம் செய்தல்.
1075. அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “அலீயே! தொழுகையை அதன் நேரம் வந்ததும்; ஜனாஸா தயாராகி விட்டதும்; துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான வரனை நீர் கண்டதும்” (ஆகிய) இந்த மூன்று காரியங்களைத் தள்ளிப் போடாதீர்” என்று என்னிடம் கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஃகரீப் தரத்தில் உள்ள செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரை முத்தஸிலாக-முறிவில்லாத அறிவிப்பாளர் தொடராக நான் கருதவில்லை.