🔗

திர்மிதி: 1097

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«طَعَامُ أَوَّلِ يَوْمٍ حَقٌّ، وَطَعَامُ يَوْمِ الثَّانِي سُنَّةٌ، وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ، وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ»


1097. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது (ஸுன்னத்) நபிவழியாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமாகும்.

யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து ஸியாத் பின் அப்துல்லாஹ் என்பவர் மட்டுமே நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் அதிகமாக அரிதான செய்திகளையும், முன்கரான செய்திகளையும் அறிவிப்பவர் ஆவார்.

வகீஃ பின் அல்ஜர்ராஹ் அவர்கள், ஸியாத் பின் அப்துல்லாஹ் சிறப்பிற்குரிய மனிதர் என்றாலும் ஹதீஸில் பொய் சொல்பவர் என்று கூறியதாக முஹம்மது பின் உக்பா அவர்கள் தெரிவித்ததாக முஹம்மது பின் இஸ்மாயீல் (புகாரீ இமாம்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.