🔗

திர்மிதி: 11

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

رَقِيتُ يَوْمًا عَلَى بَيْتِ حَفْصَةَ، «فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَاجَتِهِ مُسْتَقْبِلَ الشَّامِ مُسْتَدْبِرَ الْكَعْبَةِ»


11. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நான் என் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியுமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டின் (கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டின் திசையை முன்னோக்கியும், கஅபாவுக்குப் புறம்காட்டியும் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.