رُبَّمَا اغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْجَنَابَةِ ثُمَّ جَاءَ فَاسْتَدْفَأَ بِي فَضَمَمْتُهُ إِلَىَّ وَلَمْ أَغْتَسِلْ ”
பாடம் : 91
குளித்த பின் ஒருவர் தம் மனைவியை அணைத்து குளிர் காய்வது தொடர்பாக வந்துள்ளவை.
123 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விட்டு வந்து, என்னை அணைத்துச் சூடேற்றிக்கொள்வார்கள். நானும் அவர்களை என்னோடு அணைத்து கொள்வேன். அப்போது நான் குளித்திருக்க மாட்டேன்.