«مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ وَضَعَ لَهُ، أَظَلَّهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ تَحْتَ ظِلِّ عَرْشِهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ»
பாடம்:
கடனாளிக்கு அவகாசம் அளித்து, அவருடன் மென்மையாக நடப்பது பற்றி வந்துள்ளவை.
1306. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அவனின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் இடம்தருகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)