🔗

திர்மிதி: 1454

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّ امْرَأَةً خَرَجَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُرِيدُ الصَّلَاةَ، فَتَلَقَّاهَا رَجُلٌ فَتَجَلَّلَهَا، فَقَضَى حَاجَتَهُ مِنْهَا، فَصَاحَتْ، فَانْطَلَقَ، وَمَرَّ عَلَيْهَا رَجُلٌ، فَقَالَتْ: إِنَّ ذَاكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا، وَمَرَّتْ بِعِصَابَةٍ مِنَ المُهَاجِرِينَ، فَقَالَتْ: إِنَّ ذَاكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا، فَانْطَلَقُوا، فَأَخَذُوا الرَّجُلَ الَّذِي ظَنَّتْ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا وَأَتَوْهَا، فَقَالَتْ: نَعَمْ هُوَ هَذَا، فَأَتَوْا بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَمَرَ بِهِ لِيُرْجَمَ قَامَ صَاحِبُهَا الَّذِي وَقَعَ عَلَيْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا صَاحِبُهَا، فَقَالَ لَهَا: «اذْهَبِي فَقَدْ غَفَرَ اللَّهُ لَكِ»، وَقَالَ لِلرَّجُلِ قَوْلًا حَسَنًا، وَقَالَ لِلرَّجُلِ الَّذِي وَقَعَ عَلَيْهَا: «ارْجُمُوهُ»، وَقَالَ: «لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ المَدِينَةِ لَقُبِلَ مِنْهُمْ»


1454. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண் தொழுகைக்காக வெளியே சென்றார். அப்போது ஒரு மனிதர் அவரை எதிர்கொண்டு, அவரைப் பலவந்தமாகப் பிடித்துத் தன் தேவையைக் கழித்துக்கொண்டார் (பாலியல் வன்கொடுமை செய்தார்). அப்பெண் சத்தமிட்டவுடன் அவர் ஓடிவிட்டார்.

பிறகு வேறொரு மனிதர் அப்பெண்ணைக் கடந்து சென்றார். அப்பெண் (அவரைச் சுட்டிக்காட்டி), ‘அந்த மனிதர்தான் எனக்கு இன்னின்னவாறு செய்தார்’ என்று தனக்குள் கூறிக்கொண்டார். பின்னர் முஹாஜிரீன்கள் அடங்கிய ஒரு குழுவினர் அவரைக் கடந்து சென்றனர். அவர்களிடமும், ‘அந்த மனிதர்தான் எனக்கு இன்னின்னவாறு செய்தார்’ என்று கூறினார்.

உடனே அவர்கள் விரைந்து சென்று, அப்பெண் தன்னிடம் தவறாக நடந்தவர் என்று எண்ணிய அம்மனிதரைப் பிடித்து, அவரிடம் கொண்டு வந்தார்கள். அவர், ‘ஆம், இவர்தான்’ என்று கூறினார். எனவே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள்.

அவருக்குக் கல்லெறிந்து தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டபோது, அப்பெண்ணிடம் தவறு இழைத்த உண்மையான நபர் எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளிடம் தவறு இழைத்தவன்’ என்று கூறினார்.

எனவே நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், ‘நீ செல்லலாம், நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னித்துவிட்டான்’ என்று கூறினார்கள். (தவறாகப் பிடிக்கப்பட்ட) அந்த மனிதரிடம் சில நல்ல வார்த்தைகளைக் கூறினார்கள். அவரிடம் (உண்மையில்) தவறாக நடந்துக் கொண்ட மனிதனைக் குறித்து, ‘அவரைக் கல்லெறிந்து கொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.

மேலும், ‘மதீனாவின் மக்கள் அனைவரும் இவரது தவ்பாவைப் போன்று (உண்மையான) பாவமன்னிப்புக் கோரியிருந்தாலும், அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் எனும் அளவுக்கு இவர் (உண்மையான) தவ்பா (பாவமன்னிப்பு) செய்துள்ளார்’ என்றும் கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஹஸன் ஃகரீப் ஸஹீஹ்” எனும் தரத்தைச் சேர்ந்ததாகும். அல்கமா பின் வாயில் பின் ஹுஜ்ர் அவர்கள் தன் தந்தை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களிடமிருந்து (ஹதீஸ்களைக்) கேட்டுள்ளார். அவர் அப்துல்ஜப்பார் பின் வாயிலை விட மூத்தவர் ஆவார். அப்துல்ஜப்பார் அவர்கள் தான், தன் தந்தையிடமிருந்து (நேரடியாக எந்த ஹதீஸையும்) கேட்கவில்லை.