«لَيْسَ عَلَى العَبْدِ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ»
1527. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது.
அறிவிப்பவர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தி அப்துல்லாஹ் பின் அம்ர் ரலி), இம்ரான் பின் ஹுஸைன் ரலி) போன்றோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.