🔗

திர்மிதி: 1751

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ صَوَّرَ صُورَةً عَذَّبَهُ اللَّهُ حَتَّى يَنْفُخَ فِيهَا – يَعْنِي الرُّوحَ – وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا، وَمَنْ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ»


பாடம்:

உருவப்படம் வரைவோர் குறித்து வந்துள்ளவை.

1751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் ஓர் உருவப் படத்தை வரைகிறவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது.

தாம் கேட்பதை மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஜுஹைஃபா (ரலி), ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.