«اكْتَحِلُوا بِالإِثْمِدِ فَإِنَّهُ يَجْلُو البَصَرَ، وَيُنْبِتُ الشَّعْرَ»،
وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَهُ مُكْحُلَةٌ يَكْتَحِلُ بِهَا كُلَّ لَيْلَةٍ ثَلَاثَةً فِي هَذِهِ، وَثَلَاثَةً فِي هَذِهِ
1757. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இஸ்மித் என்ற சுர்மாவை (கண்களுக்கு) இட்டுக் கொள்ளுங்கள்! ஏனெனில் அது கண்பார்வையை அதிகரிக்கும்! கண் இமைகளை வளரச் செய்யும்!
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
மேலும், “நபி (ஸல்) அவர்களிடம் சுர்மா உள்ள ஒரு பை இருந்தது. இரவில் (தூங்கும் முன்) வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா இட்டுக்கொள்வார்கள்” என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்.