🔗

திர்மிதி: 1767

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ، عِمَامَةً، أَوْ قَمِيصًا، أَوْ رِدَاءً، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ»


பாடம்:

புத்தாடை அணியும்போது சொல்ல வேண்டியவை.

1767. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புதிய ஆடையை அணிந்தால் —அது தலைப்பாகையாகவோ, சட்டையாகவோ அல்லது மேலாடையாகவோ இருக்கலாம்— அதன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, பிறகு பின்வருமாறு கூறுவார்கள்:

‘அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி, அஸ்அலுக்க கைரஹு வ கைர மா ஸுனிஅ லஹு, வ அவூது பிக மின் ஷர்ரிஹி வ ஷர்ரி மா ஸுனிஅ லஹு’

(பொருள்: அல்லாஹ்வே! இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும்! இந்த ஆடையின் நன்மையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதன் தீமையையும் இது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் தீமையையும் விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

ஹிஷாம் பின் யூனுஸ் அல்கூஃபி அவர்கள், காஸிம் பின் மாலிக் அல்முஸனீ —> அல்ஜுரைரீ என்ற அறிவிப்பாளர்தொடரில் இதே போன்று எங்களுக்கு அறிவித்தார்.

இது ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.