«قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ»
பாடம்:
நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைதல்.
1781. உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, அவர்களுக்கு நான்கு சடை(பின்னல்)கள் இருந்தன.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ‘கரீப்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ (ரஹ்) அவர்கள், “முஜாஹித் (ரஹ்) அவர்கள் உம்மு ஹானி (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.
மேற்கண்ட செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது…
இதில் இடம்பெறும் (அப்துல்லாஹ் அவர்களின் தந்தையான) அபூநஜீஹ் அவர்களின் இயற்பெயர் யஸார் ஆகும்.
மேற்கண்ட ஹதீஸ் ‘ஹஸன்’ தரத்தில் அமைந்தது. அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் மக்காவைச் சேர்ந்தவர் ஆவார்.