🔗

திர்மிதி: 1823

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَعَا عَلَى الْجَرَادِ، قَالَ: اللَّهُمَّ أَهْلِكِ الْجَرَادَ، اقْتُلْ كِبَارَهُ، وَأَهْلِكْ صِغَارَهُ، وَأَفْسِدْ بَيْضَهُ، وَاقْطَعْ دَابِرَهُ، وَخُذْ بِأَفْوَاهِهِمْ عَنْ مَعَاشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ، قَالَ: فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ كَيْفَ تَدْعُو عَلَى جُنْدٍ مِنْ أَجْنَادِ اللهِ بِقَطْعِ دَابِرِهِ؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِنَّهَا نَثْرَةُ حُوتٍ فِي الْبَحْرِ.


1823. நபி (ஸல்) அவர்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக பிராத்திக்கும் போது

“யா அல்லாஹ்! அவற்றில் பெரியவற்றை அழிப்பாயாக! சிறியவற்றை கொன்றுவிடுவாயாக! அவற்றின் முட்டைகளை அழித்து அவற்றின் சந்ததிப் பெருக்கத்தை துண்டிப்பாயாக! எங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் உணவுகளை விட்டும் அவற்றின் வாய்களைத் தடுப்பாயாக! நீயே பிரார்த்தனைகளைச் செவியேற்பவன்” என்று கூறுவார்கள்.

அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் படைகளின் ஒரு படைக்கு எதிராக அவற்றின் சந்ததிப் பெருக்கத்தை துண்டிக்குமாறு எப்படி பிரார்த்திக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “கடலில் மீனுடைய தும்மலே வெட்டுக்கிளிகளாகும். (அதாவது மீன் தும்முவதால் வெட்டுக் கிளிகள் உருவாகிறது) என்று கூறினார்கள்.

மீன் தும்முவதைப் பார்த்த ஒருவர் (அதாவது மூஸா இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம் என்பவர்) இ(ந்த ஹதீ)தை தனக்கு அறிவித்ததாக ஸியாத் என்பார் கூறியதாக ஹாஷிம் என்பார் கூறியுள்ளார்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)