«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ النَّفْخِ فِي الشُّرْبِ» فَقَالَ رَجُلٌ: القَذَاةُ أَرَاهَا فِي الإِنَاءِ؟ قَالَ: «أَهْرِقْهَا»، قَالَ: فَإِنِّي لَا أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ؟ قَالَ: «فَأَبِنِ القَدَحَ إِذَنْ عَنْ فِيكَ»
பாடம்:
பானத்தில் ஊதுவது வெறுப்புக்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.
1887. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பானத்தில் ஊதுவதற்கு நபி (ஸல்) தடைவிதித்தார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நான் (பானத்தில்) தூசிப் போன்றதைக் கண்டால் என்ன செய்வது? என்றுக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதை (சிறிது சாய்த்துக்) கொட்டிவிடு! (தூசி போன்றவை நீங்கி விடும்) என்று கூறினார்கள்.
அவர், என்னால் ஒரே மூச்சில் பானத்தைக் குடிக்க முடியாது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வாயிலிருந்து கோப்பையை அகற்றி(விட்டு மூச்சுவிட்டுக்) கொள்!” என்றுக் கூறினார்கள்.