أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تَلْعَنِ الرِّيحَ فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ»
1978. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு காற்றைச் சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “காற்றைச் சபிக்காதீர்கள்; ஏனெனில் அது (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிய வைக்கப்பட்டதாகும். மேலும், (சாபத்திற்கு) தகுதியில்லாத ஒன்றை யாராவது சபித்தால், அந்த சாபம் அவரிடமே திரும்பிவிடும்” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை பிஷ்ர் பின் உமர் என்பவர் தான் முழுமையான அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்றே நாம் அறிகிறோம். (இதை முஸ்லிம் பின் இப்ராஹீம் என்பவர் அபான் அவர்களிடமிருந்து முர்ஸலாக-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கூறாமல் அறிவித்துள்ளார்).