أَنَّ ابْنَ عُمَرَ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّ فُلَانًا يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ، فَقَالَ لَهُ: إِنَّهُ بَلَغَنِي أَنَّهُ قَدْ أَحْدَثَ، فَإِنْ كَانَ قَدْ أَحْدَثَ فَلَا تُقْرِئْهُ مِنِّي السَّلَامَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَكُونُ فِي هَذِهِ الأُمَّةِ أَوْ فِي أُمَّتِي – الشَّكُّ مِنْهُ – خَسْفٌ أَوْ مَسْخٌ أَوْ قَذْفٌ فِي أَهْلِ القَدَرِ»
பாடம்:
2152. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “இன்ன மனிதர் தங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறச் சொன்னார்” என்றார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அந்த மனிதர் (விதியை மறுத்து மார்க்க அடிப்படையற்ற) நூதனமான கருத்தைக் கூறியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு அவர் நூதனமான கருத்தை வெளியிட்டிருந்தால், அவருக்கு என்னுடைய (பதில்) ஸலாமைத் தெரிவிக்காதீர்!
ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயத்தில் (அல்லது) என்னுடைய சமுதாயத்தில் விதி தொடர்பாக (எதிர்மறையாக)ப் பேசுவோரிடையே பூமியில் புதைதல், உருமாற்றப்படுதல், கல்மழை பொழிதல் ஆகியவற்றில் ஒன்று ஏற்படும்” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஸக்ர் என்பவரின் இயற்பெயர் ஹுமைத் பின் ஸியாத் என்பதாகும்.