🔗

திர்மிதி: 2229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الأَئِمَّةَ المُضِلِّينَ»، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الحَقِّ ظَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ يَخْذُلُهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ»


பாடம்:

வழிகெடுக்கும் தலைவர்கள்.

2229. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது சமுதாயத்தின் விசயத்தில் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களைக் குறித்துதான்.

மேலும் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும் வரை அவர்களை தோற்கடிக்க நினைப்போர் தீங்கிழைக்க முடியாமல் அவர்கள் மேலோங்கியவர்களாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் ஸஹீஹ் தரமாகும். இந்த செய்தியில் வரும் கூட்டத்தினர் ஹதீஸை உடையவர்கள் (ஹதீஸ்கலை அறிஞர்கள்) என்று அலீ பின் மதீனீ அவர்கள் கூறியதாக புகாரீ இமாம் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.