«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»
பாடம்:
உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் கையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம் என்று வந்துள்ளவை.
24. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் இரண்டு அல்லது மூன்று முறை கைகளில் தண்ணீர் ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)