لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ انْجَفَلَ النَّاسُ إِلَيْهِ، وَقِيلَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجِئْتُ فِي النَّاسِ لِأَنْظُرَ إِلَيْهِ، فَلَمَّا اسْتَبَنْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ وَكَانَ أَوَّلُ شَيْءٍ تَكَلَّمَ بِهِ أَنْ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُونَ الجَنَّةَ بِسَلَامٍ»
2485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் அவர்களை நோக்கி விரைந்துச் சென்றனர். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்!” என்று சொல்லப்பட்டது. நானும் அவர்களைப் பார்ப்பதற்காக மக்களுடன் சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாகப் பார்த்தபோது, ‘இது ஒரு பொய்யரின் முகமல்ல’ என்று தெரிந்து கொண்டேன்.
அவர்கள் முதன்முதலில் பேசியதாவது:
“மக்களே! ஸலாமைப் பரப்புங்கள். (பசித்தோருக்கு) உணவளியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் தொழுங்கள். (இவற்றால்) நீங்கள் நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)