🔗

திர்மிதி: 2493

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَقْدِرُ عَلَى أَنْ يُنَفِّذَهُ دَعَاهُ اللَّهُ عَلَى رُءُوسِ الخَلَائِقِ يَوْمَ القِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ فِي أَيِّ الحُورِ شَاءَ»


2493. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது கோபத்தைச் செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை, அல்லாஹ் மறுமைநாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான்; (ஹூருல் ஈன் எனும்) சொர்க்கக் கன்னிகளில் அவர் விரும்பும் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை அளிப்பான்.

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரலி)