«كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الخَطَّائِينَ التَّوَّابُونَ»
2499. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
(இந்த ஹதீஸ்) “ஃகரீப்” (அறிமுகம் குறைந்த, அரிதான செய்தி எனும்) வகையைச் சேர்ந்தது. இதை கதாதா அவர்களிடமிருந்து அலீ பின் மஸ்அதா என்பவர் மட்டுமே (தனித்து) அறிவிப்பதாக நாம் அறிகிறோம்.