قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ، أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ؟ قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ»
துணைப் பாடம்:
2517. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லது அவிழ்த்துவிட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
யஹ்யா பின் ஸயீத் அவர்கள், என் பார்வையில் இந்த செய்தி நிராகரிக்கப்பட்டதாகும் என்று கூறியதாக அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் அவர்கள் கூறினார்.
இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வந்துள்ள செய்திகளில் இந்த அறிவிப்பாளர்தொடரையே நாம் அறிகிறோம். இது அரிதான செய்தியாகும்.
மேலும் இந்த செய்தி அம்ர் பின் உமைய்யா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.