🔗

திர்மிதி: 2518

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ، فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَإِنَّ الكَذِبَ رِيبَةٌ»


2518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியவைகளில், நீங்கள் நினைவில் வைத்திருக்கும் (முக்கிய) செய்தி என்ன?” என்று நான் (நபி (ஸல்) அவர்களின் பேரனான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம் கேட்டேன், அதற்கவர்கள், “உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்ற (உறுதியான விஷயத்)தின் பால் சென்று விடு. (ஏனெனில்) உண்மை, மனஅமைதி தரக்கூடியதாகவும், பொய், சந்தேகத்தை உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் நினைவில் வைத்துள்ளேன் என்று பதிலளித்தார்கள்.