مَنْ سَأَلَ اللَّهَ الجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الجَنَّةَ، وَمَنْ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ
2572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.
ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்தியை, (அபுல்அஹ்வஸ்-ஸல்லாம் பின் ஸுலைம் அவர்களைப் போன்றே) அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அவரின் மகன் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் என்பவரும் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தி அபூஇஸ்ஹாக் அவர்களின் வழியாக நபித்தோழரின் சொல்லாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.