🔗

திர்மிதி: 2609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«بُنِيَ الإِسْلَامُ عَلَى خَمْسٍ، شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَصَوْمِ رَمَضَانَ، وَحَجِّ البَيْتِ»


பாடம்: 3

இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது என்பதைக் குறித்து வந்துள்ளவை.

2609. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்களால்) எழுப்பப்பட்டுள்ளது. அவை:

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி கூறுவது.
2. தொழுகையைக் கடைப்பிடிப்பது.
3. ஸகாத் வழங்குவது.
4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.
5. ஹஜ் செய்வது.”

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதே நபிமொழி, இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) ஸுஅய்ர் பின் அல்கிம்ஸ் அத்தமீமீ என்பார் ஹதீஸ்கலை அறிஞர்களிடம் நம்பத்தகுந்த அறிவிப்பாளர் ஆவார்.

இந்த நபிமொழி இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதுவும் ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.