«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ عَلِمَهُ ثُمَّ كَتَمَهُ أُلْجِمَ يَوْمَ القِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»
பாடம்: 3
கல்வியை (பிறருக்குக் கற்பிக்காமல்) மறைப்பதைக் குறித்து வந்துள்ளவை.
2649. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரிடம் அவர் அறிந்திருக்கும் அறிவு ஒன்றைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டு அதை அவர் சொல்லாமல் மறைத்தால், மறுமை நாளில் அவருக்கு (நரக) நெருப்பினாலான கடிவாளம் பூட்டப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஜாபிர் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தி “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.