«يَا عَلِيُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ»
2777. நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறியதாவது:
அலீயே! பார்வை, பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது). அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்-தனித்து அறிவிக்கப்பட்ட செய்தி” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இதை ஷரீக் என்பவரின் வழியாகவே நாம் அறிகிறோம்.