” ثَلَاثٌ لَا تُرَدُّ: الوَسَائِدُ، وَالدُّهْنُ، وَاللَّبَنُ “
2790. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):
1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
அத்துஹ்ன்-எண்ணெய் என்பது இங்கு வாசனைத் திரவியத்தைக் குறிக்கும்.
இது “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் இடம்பெற்றுள்ள அப்துல்லாஹ் பின் முஸ்லிம் என்பவர் இப்னு ஜுன்துப் என்பவர் ஆவார். இவர் மதீனாவைச் சேர்ந்தவர்.