«إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ، نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ، كَرِيمٌ يُحِبُّ الكَرَمَ، جَوَادٌ يُحِبُّ الجُودَ، فَنَظِّفُوا – أُرَاهُ قَالَ – أَفْنِيَتَكُمْ وَلَا تَشَبَّهُوا بِاليَهُودِ»
قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُهَاجِرِ بْنِ مِسْمَارٍ، فَقَالَ: حَدَّثَنِيهِ عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: «نَظِّفُوا أَفْنِيَتَكُمْ».
பாடம்:
தூய்மை செய்வது குறித்து வந்துள்ளவை.
2799. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; தூய்மையை விரும்புகிறவன்.
சுத்தமானவன்; சுத்தத்தை விரும்புகிறவன்.
கண்ணியமானவன்; கண்ணியத்தை விரும்புகிறவன்.
கொடையாளன்; கொடை வழங்குவதை விரும்புகிறவன்.
ஆகவே, உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்களுக்கு ஒப்பாக ஆகாதீர்கள்.
அறிவிப்பவர்: ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்)
மேலும் ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதை, முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்களிடம் நான் கூறியபோது, “இதேபோன்ற ஹதீஸை ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள், தம் தந்தை ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்கள்.
எனினும், அதில், “உங்களின் முற்றங்களைச் சுத்தமாக வையுங்கள்” என்றே இடம்பெற்றிருந்தது. (யூதர்களுக்கு ஒப்பாவது பற்றி குறிப்பிடவில்லை)” என்று முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.