🔗

திர்மிதி: 2801

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يَدْخُلِ الحَمَّامَ بِغَيْرِ إِزَارٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يُدْخِلْ حَلِيلَتَهُ الحَمَّامَ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يَجْلِسْ عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا بِالخَمْرِ»


பாடம்:

பொதுக் குளியலறைக்குள் குளிப்பது குறித்து வந்துள்ளவை

2801. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், கீழாடை அணியாமல் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் குளிக்க வேண்டாம்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், தனது மனைவியைக் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் அனுப்ப வேண்டாம்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், மதுபானம் பரிமாறப்படும் உணவு மேசையில் அமர வேண்டாம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். தாவூஸ் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்தச் செய்தியை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.

“லைஸ் பின் அபூஸுலைம் உண்மையாளர் தான்; எனினும் சில நேரங்களில் அவர் தவறாக அறிவிப்பார்” என முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி அவர்கள் கூறினார்.

“லைஸ் என்பவரின் ஹதீஸ்கள் மகிழ்ச்சி தரும் விதத்தில் (ஆதாரபூர்வமாக) இருப்பதில்லை. காரணம் மற்றவர்கள் ‘மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாக’ அறிவிப்பதை இவர் ‘மர்பூஃவாக-நபியின் சொல்லாக’ அறிவிப்பார். அதனால் தான் அறிஞர்கள் அவரைப் பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்” என்று அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறியதாக முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி அவர்கள் குறிப்பிட்டார்.