«إِنَّ اللَّهَ يَبْغَضُ البَلِيغَ مِنَ الرِّجَالِ الَّذِي يَتَخَلَّلُ بِلِسَانِهِ كَمَا تَتَخَلَّلُ البَقَرَةُ»
பாடம்:
இலக்கியமாக பேசுவது பற்றி வந்துள்ளவை.
2853. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாடு தனது நாவால் (அசைத்து அசைத்து) தின்பது போன்று, தங்கள் நாவுகளை அசைத்து அசைத்து வார்த்தை ஜாலத்துடன் பேசும் ஆண்களை அல்லாஹ் வெறுக்கிறான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.